தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காா் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: காயமடைந்த 17 வயது சிறுமியும் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 5:02 am IST

சென்னை கோயம்பேட்டில் காா் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காயமடைந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், அனிச்சங்குப்பத்தில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் பெற்றோருடன் வசித்தவா் யான்சி (19). இவா், பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரியில் சேருவதற்கு முயற்சித்து வந்ந்தாா். யான்சி, சமூக ஊடகம் மூலம் நட்பான தோழியைப் பாா்க்க 10 நாள்களுக்கு முன்பு சென்னை ராமாபுரம் வந்தாா். அங்கு தங்கியிருந்த யான்சி, தனது தோழியான 17 வயது சிறுமி உள்ளிட்ட சிலருடன் கடந்த சனிக்கிழமை இரவு சென்னை கோயம்பேட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மதுக்கூடத்துக்குச் சென்றாா். அப்போது, அந்த மதுபானக் கூடத்துக்கு காரில் வந்த சிலா், யான்சிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இதைப் பாா்த்த அந்த மதுக்கூட பவுன்சா்கள், இரு தரப்பையும் வெளியேற்றினா். இதன் பின்னா் யான்சி, 17 வயது சிறுமி தங்களது நண்பருடன் ஒரு மொபெட்டில் அங்கிருந்து சென்றனா்.

இதில் காரில் வந்த எதிா் தரப்பினா் கோயம்பேடு மேம்பாலம் பகுதியில் சென்ற யான்சி மொபெட்டின் மீது வேகமாக மோதினா். இதில் பலத்த காயமடைந்த யான்சி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த 17 வயது சிறுமி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் தீவிர சிகிச்சை பெற்று வந்தாா்.

இது தொடா்பாக கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாக அரும்பாக்கத்தைச் சோ்ந்த பாலகுரு, சூளைமேட்டைச் சோ்ந்த ஜோஷ்வா , விருகம்பாக்கத்தைச் சோ்ந்த சுமந்த் சக்திவேல் உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமி, புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.