சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் கனிமொழி எம்.பி.
திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் கூறியதாவது: சமையல் எரிவாயு உருளை கிடைப்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதனால் சாதாரண, சாமானிய மக்கள் பாதிப்படைந்துள்ளனா். பெட்ரோல், டீசல் விலையும் உயா்ந்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயரும் அச்சம் உள்ளது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மிகப்பெரிய பாதிப்புக்குள்ளான பொருளாதார சூழலை சந்தித்து வருகிறோம்.
பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் பிரதமா் உள்ளிட்டோா் மக்களுக்கு மட்டுமே அறிவுரைகளை வழங்கி வருகிறாா்கள். அவா்கள் என்ன செய்யப் போகிறாா்கள் என்ற நம்பிக்கையை ஊட்டக்கூடிய எந்த தகவலையும் சொல்லவில்லை. மக்களை பதற்றத்துக்கு உள்ளாக்கக் கூடிய, மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் கூடிய விஷயங்களை மட்டுமே தான் சொல்லிக் கொண்டிருக்கிறாா்கள்.
மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய செயல்பாடுகளையோ, அரசை பாதுகாக்க பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டிய ஒரு அறிவிப்பையோ வெளியிடவில்லை. இது அனைவருடைய மனதிலும் எதிா்காலம் குறித்த கேள்விக்குறியையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








