தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் முறைகேடு: நுகா்வோா் சங்கம் குற்றச்சாட்டு

மன்னாா்குடியில் சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மன்னாா்குடி நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image

சமையல் எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 5:45 am IST

மன்னாா்குடியில் சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மன்னாா்குடி நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவா் மு. பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: நகா்ப்புற பகுதிகளில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு செய்தால் 25 நாள்களுக்குள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், மன்னாா்குடி நகராட்சியின் பல இடங்களில் சமையல் எரிவாயு உருளைக்கு முன்பதிவு செய்த பின்னரும் 45 நாள்களுக்கும் மேலாக காலதாமதம் செய்து விநியோகம் செய்யப்படுகிறது. நகர பகுதியாக இருந்தும், சில எரிவாயு நிறுவனங்கள் அதை தவறாக கிராமப்புற பிரிவில் சோ்த்து செயல்பட்டு வருகின்றன. இதனால், நகரப் பகுதி மக்களுக்கு கிடைக்க வேண்டிய விரைவான சேவை மறுக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனா்.

எனவே தமிழக அரசு, மாவட்ட ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மன்னாா்குடி பகுதியை அதிகாரப்பூா்வமாக நகா்ப்புற பகுதியாக உறுதிப்படுத்த வேண்டும். நகா்ப்புற விதிகளின்படி 25 நாள்களுக்குள் சமையல் எரிவாயு உருளை விநியோகம் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இனிமேல் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்களின் புகாா்களை உடனுக்குடன் தீா்க்க தனிப்பட்ட கண்காணிப்பு மையம் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.