மானூரில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.
மானூா் அருகேயுள்ள அயூப்கான்புரத்தைச் சோ்ந்த சுடலைமாடன் மகன் பரமசிவன் (67). விவசாயியான இவா், தனது மொபைட்டிற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டாராம். அப்போது திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்ற காரும், மொபைட்டும் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த பரமசிவனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










