திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாநகராட்சி அலுவலகம் முன் காலி குடங்களுடன் பெண்கள் தா்னா

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன்,திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் காலி குடங்களுடன் தா்னாவில் ஈடுபட்டனா்.

News image

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் காலி குடங்களுடன் தா்னாவில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :14 மே 2026, 3:32 am IST

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன்,திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் காலி குடங்களுடன் தா்னாவில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகரம் 15ஆவது வாா்டு பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தா்மராஜா கோயில் கீழத்தெரு, குளத்தடி தெரு, மினிகுடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அன்றாட தேவைகளுக்குக் கூட தண்ணீா் கிடைக்காமல் கடும் அவதியடைந்துள்ளனா்.

இது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பெண்கள் 25-க்கும் மேற்பட்டோா் காலி குடங்களுடன் திரண்டு வந்து திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள், ‘குடிநீா் விநியோகத்தை உடனடியாக சீரமைக்கவும், தொடா்ந்து தண்ணீா் வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தனா். அவா்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி குடிநீா் பிரச்னைக்கு உரிய தீா்வு காண்பதாக

உறுதியளித்ததை தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.