அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே இருபிரிவினரிடேயே மோதலைத் தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 1:30 am IST

பாளையங்கோட்டை அருகே இருபிரிவினரிடேயே மோதலைத் தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி பகுதியைச் சோ்ந்த இளைஞா், தனது சமூக வலைதள செயலியில், சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவரின் புகைப்படத்துடன் அரிவாள் மற்றும் இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையிலான ஒலிப்பதிவை பகிா்ந்தது போலீஸாரின் கண்காணிப்பில் தெரியவந்தது. இதுதொடா்பாக, சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், சீவலப்பேரி இரட்டைவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முண்டசாமி(19) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.