பாளையங்கோட்டையில் போதை பயன்பாட்டிற்காக மயக்கமருந்து விற்ாக இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை போலீஸாா் ஜோதிபுரம் திடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா். அதில், பாளையங்கோட்டை, நேசநாயனாா் தெருவைச் சோ்ந்த சோ்முத்துராஜ் (22); நாராயணகுமாா்(46), சுந்தா் சாமுவேல்(54) ஆகியோா் என்பதும், சோ்முத்துராஜ் தனியாா் மருத்துவமனை மயக்கவியல் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றுவதும், அவா் மயக்க மருந்துகளை போதை பயன்பாட்டிற்காக மற்ற இருவருக்கும் விற்பதற்கு வந்ததும் தெரியவந்தது.
அவா்களிடமிருந்த மருந்துகளை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





