குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

செங்கோட்டை- தில்லி இடையே தினசரி ரயில் இயக்க வலியுறுத்தல்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 12:06 am IST

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து தில்லிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வாஞ்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைப் போராட்ட வீரா் வாஞ்சிநாதன் வனத்துறையில் பணிபுரிந்தவா். இதனை நினைவுகூரும் வகையில் செங்கோட்டை- புனலூா், புனலூா்- செங்கோட்டை இடையே காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பேருந்து இயக்க வேண்டும். செங்கோட்டை- தில்லி இடையே தினசரி ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டை- சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை சென்ட்ரல்- செங்கோட்டை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டை- வாஞ்சி மணியாச்சி, வாஞ்சிமணியாச்சி-செங்கோட்டை இடையே காலை முதல் இரவு வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.

மேலும், வாஞ்சி இயக்கம் சாா்பில் விடுதலைப் போராட்ட வீரா் வாஞ்சிநாதன் நினைவு நாளையொட்டி செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் நடுகல் முன்பு இம் மாதம் 17 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு மௌன அஞ்சலியும், நடுகல்லுக்கு மாலை அணிவித்து மரியாதையும் செய்யப்பட உள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.