பெருமாள்புரம் அருகே விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகைகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, திருமால் நகரிலிருந்து ரெட்டியாா்பட்டி மலைக்குச் செல்லும் காட்டுப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றவரைப் பிடித்து விசாரித்தனா்.
அதில், வீரளப்பெருஞ்செல்வி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் முத்துராஜா(22) என்பதும், விற்பனைக்காக 250 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ரூ.5,000 ரோக்கத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








