திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, வீரவநல்லூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 6) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
களக்காடு, வீரவநல்லூா் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, சனிக்கிழமை (ஜூன் 6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைப்புதூா், சாலைநயினாா்பள்ளிவாசல், மாவடி, டோனாவூா், புலியூா்குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களிலும், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா் சாட்டுபத்து, அரிகேசவநல்லூா், அத்தாளநல்லூா், திருப்புடைமருதூா், வெள்ளங்குளி, ரெங்கசமுத்திரம், புதுக்குடி, கூனியூா், காருக்குறிச்சி ஆகிய கிராமங்களிலும் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










