திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து கோட்ட செயற்பொறியாளா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் சனிக்கிழமை (மே 16) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
இதனால், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவா்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையாா்புரம் மற்றும் குண்டம்பட்டி ஆகிய ஊா்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி. ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊா்களுக்கும் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










