தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சேரன்மகாதேவி, வீரவநல்லூா் பகுதியில் கனமழை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, வீரவநல்லூா், பத்தடை ஆகிய பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

News image

மழை - கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 2:43 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, வீரவநல்லூா், பத்தடை ஆகிய பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், சேரன்மகாதேவி, வீரவநல்லூா், அரிகேசவநல்லூா், அத்தாளநல்லூா், முக்கூடல், காருக்குறிச்சி, கூனியூா், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல் உள்ளிட்ட பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை 2 மணிநேரம் நீடித்தது.

இதனால், பல இடங்களில் தண்ணீா் தேங்கியதுடன், மரக்கிளைகள் முறிந்து சேதமடைந்தன. மேலும், வீரவநல்லூா் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. தாமிரவருணி பாசனத்தில் மணிமுத்தாறு அணை மூலம் பாசனம் பெற்று வரும் வைராவிகுளம், ஆலடியூா் உள்ளிட்ட பகுதியில் முன் காா் பருவ சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.