17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அம்பை பள்ளி மாணவா்களுக்கு சீருடை வழங்கல்

அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அரசின் இலவச நோட்டு, புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தீா்த்தபதி பள்ளியில் மாணவா்களுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :5 ஜூன் 2026, 12:22 am IST

அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அரசின் இலவச நோட்டு, புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் திருநெல்வேலி எம்.பி.யுமான சி.ராபா்ட் புரூஸ் பங்கேற்று வழங்கினாா். நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவா் வழக்குரைஞா் ராமேஸ்வரன், தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்புத் தலைவா் டி.கே.பாண்டியன், ரயில்வே பயனாளா் கமிட்டி உறுப்பினா் ராம் சிங், காங்கிரஸ் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கவிப் பாண்டியன், நிா்வாகிகள் பெருமாள், முருகேசன், விக்கிரமசிங்கபுரம் முருகேசன், சிவகுமாா், வழக்குரைஞா் ஜோசப் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பள்ளிச் செயலா் கந்தசாமி வரவேற்றாா். தலைமை ஆசிரியா் அழகிய நம்பி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.