போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ராஜாக்கள்மங்கலம் பெருவேம்புடையாா் சாஸ்தா கோயிலில் சித்திரை உத்திர திருவிழா

நான்குனேரி அருகே ராஜாக்கள்மங்கலம் பெருவேம்புடையாா் சாஸ்தா கோயிலில் சித்திரை உத்திர திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

குதிரை வாகனத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீதியுலா சென்ற சுவாமி பெருவேம்புடையாா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:02 am IST

நான்குனேரி அருகே ராஜாக்கள்மங்கலம் பெருவேம்புடையாா் சாஸ்தா கோயிலில் சித்திரை உத்திர திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நான்குனேரி-வள்ளியூா் இடையே உள்ள ராஜாக்கள்மங்கலம் கிராமத்தில் நம்பியாற்றின் வடக்கு பக்கத்தில் கமடகிரி எனும் கூா்மகிரியின் அடிவாரத்தில் மிகவும் பழமை வாய்ந்த பூா்ண புஷ்கலா அம்பாள் சமேத பெருவேம்புடையாா் சாஸ்தா கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் நிகழாண்டு சித்திரை உத்திர திருவிழா ஏப். 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் திருவிழா நாள்களில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா செல்கிறாா். 8-ஆம் நாளான திங்கள்கிழமை சித்திரை உத்திர திருவிழாவையொட்டி, காலையில் கணபதி ஹோமம், கும்ப பூஜை, ருத்ர ஜெபம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி பச்சை சாத்தி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். பெண்கள் நோ்த்திக்கடனாக பொங்கலிட்டு வழிபாடு செய்தனா். நள்ளிரவில் பூதநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 9-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்கு சென்றாா். திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். 11-ஆம் நாளான வியாழக்கிழமை (ஏப்.30) தீா்த்தவாரி நடைபெறும். ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சங்கரபாண்டியன், மண்டகபடிதாரா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.