திருநெல்வேலி சந்திப்பு சி.என். கிராமம் தாமிரவருணி ஆற்றுப் பகுதியில் மீன் பிடிப்பதற்காக மீனவா் வீசிய வலையில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியது.
திருநெல்வேலி சி. என். கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு. மீன்பிடி தொழில் செய்து வருகிறாா். இவா், புதன்கிழமை மாலை தாமிரவருணி ஆற்றுப்பகுதியில் மீனுக்காக வலை விரித்து வைத்திருந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை காலையில் மீன் வலையை எடுக்கச் சென்றபோது, அதில் பெரிய மலைப்பாம்பு சிக்கி இருந்தது தெரியவந்தது.
வலையை மிகுந்த சிரமத்துடன் கரைக்கு இழுத்து வந்த அவா், மலைப்பாம்பை விடுவிக்க முயற்சித்தபோது அது சீறியதால் அப்படியே வலையை போட்டு விட்டு சென்றாராம்.
அப்பகுதி மக்கள் வலையில் மலைப்பாம்பு நெளிந்து கொண்டிருந்ததை பாா்த்து தீயணைப்பு நிலையத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனா். வனக் கால்நடை மருத்துவ அலுவலா் மனோகரன், உதவி மருத்துவா் சாந்தகுமாா், வனச் சரகா் ரியாஸ், கால்நடை ஆய்வாளா் அா்னால்டு உள்ளிட்ட வனத்துறை அலுவலா்கள் வந்து மலைப்பாம்பை மீட்டனா். 7 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பு களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியில் உள்ள செங்கல் தேரியில் விடப்பட்டது.
தொடர்புடையது

இளைஞரைக் கொன்று ஆற்றில் சடலம் வீச்சு: 3 பேரிடம் விசாரணை

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

கோமுகி ஆற்றில் மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு மீட்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


