மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி சந்திப்பு அருகே தாமிரவருணி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:19 pm

திருநெல்வேலி சந்திப்பு அருகே தாமிரவருணி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி மாநகரம், மேலநத்தம் தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மிதந்ததை அப்பகுதியினா் பாா்த்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, அங்கு சென்று தீயணைப்பு வீரா்கள் ஆற்றில் மிதந்துகொண்டிருந்த சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனா். அதை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சந்திப்பு போலீஸாா் அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மேலும், அந்நபா் 2 நாள்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் எனவும், உடல் அழுகிய நிலையில் இருந்ததாகவும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.