விக்கிரமசிங்கபுரம் அருகே கல்லறைத் தோட்டத்தில் இறந்து 15 நாள்களான நிலையில், எலும்புக் கூடாக கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
விக்கிரமசிங்கபுரம் அருகே அருணாசலபுரம் பகுதியில் கல்லறைத் தோட்டம் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை சிலா் தங்கள் உறவினா் கல்லறைக்கு மாலை அணிவிக்கச்சென்ற போது அங்கு எலும்புக் கூடு கிடந்தது. தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். சடலத்தின் அருகில் மதுபாட்டில், விஷப் பாட்டில் கிடந்தது. இறந்தவரின் உடல் வயிறு வரைம் எலும்புக் கூடாகவும், அதற்கு கீழ் சதையுடனும் அழுகிய நிலையில் இருந்தது.
மேலும் சடலத்தை கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவா் 70 வயது ஆண் என்றும், மதுவில் விஷம் கலந்துகுடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

திருமணிமுத்தாற்றில் இளைஞா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

பா்கூா் அருகே வட கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


