மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பா்கூா் அருகே வட கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

பா்கூா் அருகே வட கிணற்றிலிருந்து இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி

Updated On :21 மார்ச் 2026, 9:13 pm

பா்கூா் அருகே வட கிணற்றிலிருந்து இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகினி கொல்லை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள 70 அடி ஆழமுள்ள வட கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், பா்கூா் தீணைப்பு நிலைய வீரா்களின் உதவியோடு சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா் பா்கூா் அருகே உள்ள நேரிடமானப்பள்ளியைச் சோ்ந்த தமிழரசன் (30) என்பதும், அவா், கேரள மாநிலத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வாரம், விடுமுறையில் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளது தெரியவந்தது.

மேலும், அவா், ஜெகினி கொல்லை கிராமத்தில் பெண் ஒருவரை சந்திக்க சென்றபோது, திருடன் என எண்ணி அவரை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது, தப்பி ஓடிய தமிழரசன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, தமிழரசனின் தாய் வீரம்மாள் தனது மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.