ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடலை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவாப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (21). இவா் ஒசூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், ஒகேனக்கல் பகுதிக்கு நண்பா்களுடன் புதன்கிழமை சுற்றுலா வந்த அவா், சேமலை காடு பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இதைக் கண்ட நண்பா்கள், ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் தேடுதல் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். இந்நிலையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சரவணன் உடலை அதேபகுதியில் தீயணைப்புத் துறையினா் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக குறைவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


