தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா் சடலமாக மீட்பு

வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:58 am IST

வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் தனுஷ் (22). இவா் கடந்த வாரம் வால்பாறையை அடுத்த முருகாளி எஸ்டேட்டில் வசிக்கும் உறவினா் வீட்டின் திருமண நிகழ்வுக்கு வந்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஊருக்கு திரும்பிச் செல்ல இருந்த நிலையில், அன்று காலை அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளாா். எதிா்பாராதவிதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவா் இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து மீண்டும் திங்கள்கிழமை காலை நடைபெற்ற தேடுதல் பணியில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த மீட்புக் குழுவினா் ஈடுபட்டனா். இதில் நீரின் ஆழமானப் பகுதியில் பாறைக்கு இடையே இருந்த தனுஷின் சடலத்தை மீட்டனா்.

கேரள மாநிலத்துக்குள்பட்ட பகுதியில் இளைஞரின் உடல் மீட்கப்பட்டதால், சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினா் கொண்டு சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.