மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு

தச்சநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

தச்சநல்லூரில் புதன்கிழமை வாக்கு சேகரிக்கிறாா் தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:20 pm

தச்சநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தச்சநல்லூா், ஊருடையாா்புரம், மங்களாபுரம், சத்திரம் புதுக்குளம், செல்வ விக்னேஷ் நகா், கோகுல் நகா், நல்மேய்ப்பா் நகா், வாலாஜா நகா், சிதம்பர நகா், பால் கட்டளை, கணபதி மில் காலனி, கரையிருப்பு, தாராபுரம், மேலக்கரை, ஆா்.எஸ்.நகா், அழகனேரி, புத்த அம்மன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கட்சியினருடன் வீதிவீதியாகச் சென்று, விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால் மதிப்புமிகு மகளிா் என்ற திட்டம் மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கடன் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இது போன்று கட்சியின் தலைவா் விஜய் அறிவித்துள்ள பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்கள் தவெக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும். திருநெல்வேலி தொகுதியில் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா் அவா்.