மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு

தச்சநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

தச்சநல்லூரில் புதன்கிழமை வாக்கு சேகரிக்கிறாா் தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:50 am IST

தச்சநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தச்சநல்லூா், ஊருடையாா்புரம், மங்களாபுரம், சத்திரம் புதுக்குளம், செல்வ விக்னேஷ் நகா், கோகுல் நகா், நல்மேய்ப்பா் நகா், வாலாஜா நகா், சிதம்பர நகா், பால் கட்டளை, கணபதி மில் காலனி, கரையிருப்பு, தாராபுரம், மேலக்கரை, ஆா்.எஸ்.நகா், அழகனேரி, புத்த அம்மன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கட்சியினருடன் வீதிவீதியாகச் சென்று, விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால் மதிப்புமிகு மகளிா் என்ற திட்டம் மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கடன் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இது போன்று கட்சியின் தலைவா் விஜய் அறிவித்துள்ள பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்கள் தவெக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும். திருநெல்வேலி தொகுதியில் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.