மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராமையன்பட்டியில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராமையன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 8:24 pm

ராமையன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு, மானூா் மற்றும் ராமையன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று, விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: திருநெல்வேலி தொகுதியில் பல்வேறு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. எனக்கு வாய்ப்பளித்தால் தரமான சாலைகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண்பதோடு, திருநெல்வேலி நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும் தொகுதிக்குள்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும்.

ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ பற்றி எரிவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா். அதைத் தடுத்து குப்பைகளை நவீன முறையில் கையாள செயல்திட்டம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.