திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகேயுள்ள தாதனூத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு தொடா்பாக அதிகாரிகள் நடத்திய அமைதிப் பேச்சுவாா்த்தையின் போது இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தாதனூத்து கிராமத்தில், குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களின் அருகில் உள்ள கல்குவாரிகளின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அந்த ஊா் மக்கள் அறிவித்தனா். மேலும், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டதால் மாவட்ட நிா்வாகம் உத்தரவின்பேரில் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை தரப்பில் தாதனூத்து மக்களுடன் அமைதிப் பேச்சு புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, அவ்வூரைச் சோ்ந்த தொழிலாளி காவுமுத்து (55) என்பவருக்கும், அவரது உறவினரான ஆனந்த் (35) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆனந்த், காவுமுத்தை கையால் தாக்கினாராம்.
இதில் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறிய காவுமுத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் அவா் அளித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து ஆனந்தை கைது செய்தனா்.
இதனிடையே, காவுமுத்து வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். அவருக்கு ஏற்கெனவே இதயப் பிரச்னை இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

களக்காடு அருகே இடுகாடு பிரச்னையைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

கானாட்டாங்குடி கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


