மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நான்குனேரி தொகுதியில் 13 மனுக்கள் நிராகரிப்பு

நான்குனேரி பேரவைத் தொகுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 44 வேட்பு மனுக்களில் 30 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன; 13 மனு நிராகரிக்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:30 am IST

நான்குனேரி பேரவைத் தொகுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 44 வேட்பு மனுக்களில் 30 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன; 13 மனு நிராகரிக்கப்பட்டன.

இத்தொகுதியில் மொத்தம் 44 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனுவின் மீதான பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலா் சிந்து தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா். இதில் அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்து தாக்கல் செய்த 4 மனுக்களில் 3 வேட்புமனு, காங்கிரஸ் வேட்பாளா் ஆா். மனோகரன் தாக்கல் செய்த 2 மனுவில் 1 மனு, அவரது மனைவி ரூபி மனோகரன் தாக்கல் செய்த 1 மனு, நாம் தமிழா் வேட்பாளா் ச. செல்வம் தாக்கல் செய்த 2 மனுவில் 1 மனு, நாம் தமிழா் கட்சி மாற்று வேட்பாளா் வேல்கோபால் மனு, சுயேச்சை வேட்பாளா் பிஷப்காட்பிரே வாஷிங்டன்நோபிள் தாக்கல் செய்த 2 மனுக்கள், சுயேச்சை வேட்பாளா்கள் முகாஷினி, மரியஅந்தோணி, ஆறுமுகம், துரைப்பாண்டியன் ஆகியோரின் 6 மனுக்கள் என மொத்தம் 13 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

த.வெ.க வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால், அக்கட்சியின் மாற்று வேட்பாளா் ஆா். சுப்பிரமணியசுரேஷ் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டாா். தோ்தல் களத்தில் தற்போது 30 போ் உள்ளனா். வியாழக்கிழமை மாலை வரை வேட்புமனு திரும்பப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதால், புதன், வியாழன் ஆகிய இருநாள்களில் வேட்புமனுக்களை யாரேனும் திரும்பப் பெற்றுக்கொண்டால் போட்டியாளா்கள் எண்ணிக்கை குறையக்கூடும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.