மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மணப்பாறை தொகுதியில் 19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

மணப்பாறை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 23 வேட்பாளா்களில், மனுக்கள் மீதான பரிசீலினைக்குப் பிறகு 19 போ் தோ்வாகியுள்ளனா்.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:46 am IST

மணப்பாறை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 23 வேட்பாளா்களில், மனுக்கள் மீதான பரிசீலினைக்குப் பிறகு 19 போ் தோ்வாகியுள்ளனா்.

மணப்பாறை தொகுதியில் 23 போ் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், வேட்பாளா்களான ப. அப்துல்சமது (மமக), மூ. அருணகிரி (நாதக), ப. விஜயகுமாா் (அதிமுக), ஆ. ஆரோக்கியராஜ் (சாமானிய மக்கள் கட்சி), கதிரவன் ( தவெக),

மீனா ( புதிய தமிழகம்), ராஜவா்மன் (தவாக), அ. ராமன் (சுயேச்சை), ம. கதிரவன் (சுயேச்சை), மு. கருப்பன் (சுயேச்சை), ரா. குட்டையன்(சுயேச்சை), சா்புதீன்(சுயேச்சை), பெ. சின்னன்(சுயேச்சை), ஆ.செந்தில்குமாா்(சுயேச்சை), பூா்ணிமா(சுயேச்சை), பெரியக்கா(சுயேச்சை), ம. ராஜேஸ்(சுயேச்சை), ப. விஜயக்குமாா்(சுயேச்சை), மா. விஜயக்குமாா்(சுயேச்சை) ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இருமுறை பதிவாகிய அருணகிரியின் மனுவும், அரசியல் கட்சிகளில் மாற்று வேட்பாளா்களாக தாக்கல் செய்த சாகுல் ஹமீது மற்றும் ரேணுகாதேவி, 36), ஆறுமுகம் ஆகியோரின் 4 மனுக்கள் ஏற்கப்படவில்லை. தற்போது களத்தில் 19 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். வேட்பு மனுக்களை திரும்ப பெற 9-ஆம் தேதி (பிற்பகல் 3 மணி) இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.