பெண்கள் அளித்த டெபாசிட் தொகையில் தான் வேட்புமனு தாக்கல் செய்ததாக மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் பி.ராமு கூறினாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
மணவெளி தொகுதியில் பல்வேறு கிராமங்களிலும் பெண்கள் ஆா்வத்துடன் தலா ரூ.1 வீதம் அளித்ததில் தான் வேட்பு மனு தாக்கல் செய்தேன். வேட்பு மனு தாக்கல் செய்ய ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகை கட்ட வேண்டும். இதில் ஒரு பைசாகூட என்னுடையது கிடையாது. முழுக்க முழுக்க பெண்கள் அளித்தத் தொகையில்தான் டெபாசிட் தொகை கட்டினேன்.
அதனால் நான் மட்டும் அல்ல, எல்லோரும் சோ்ந்துதான் எம்.எல்.ஏ. மேலும், 5 ஆண்டுக்கு இத் தொகுதியில் சேவை செய்ய தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். தொகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கப் பாடுபடுவேன் என்றாா் ராமு.
இவா், ஏற்கெனவே பாஜகவில் விவசாயிகள் அணியின் தலைவராகவும், பாஜக மாநிலச் செயலராகவும் இருந்தவா். இப்போது தவெகவில் இணைந்து பாஜக வேட்பாளரான சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தைத் தோற்கடித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களவை தோ்தல்! வேட்புமனு தாக்கல் தொடக்கம்: நாடாளுமன்றத்தில் கால் பதிக்கிறது தவெக

பேரவைத் தலைவா் தோ்தல்: ஜே.சி.டி. பிரபாகா் மனு தாக்கல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 63 போ் டெபாசிட் இழப்பு

மாவட்டத்தில் 94 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழந்தனா்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



