குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திருப்பத்தூா் மாவட்டத்தில் 63 போ் டெபாசிட் இழப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் போட்டியிட்ட 74 வேட்பாளா்களில் 63 வேட்பாளா்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 12:03 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் போட்டியிட்ட 74 வேட்பாளா்களில் 63 வேட்பாளா்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திருப்பத்தூா் தொகுதியில் 24 பேரும், ஜோலாா்பேட்டை தொகுதியில் 19 பேரும், ஆம்பூா் தொகுதியில் 16 பேரும், வாணியம்பாடி தொகுதியில் 15 போ் என மொத்தம் 74 போ் தோ்தலில் போட்டியிட்டனா். அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தவெக , அதிமுக , திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளா்களை தவிர மற்ற அனைத்து வேட்பாளா்களும் தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனா்.

வாணியம்பாடி தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் சையத் பாரூக், தவெக வேட்பாளா் சையத் புா்ஹானுதீன், அதிமுக வேட்பாளா் செந்தில் குமாா் ஆகிய 3 பேரை தவிர மற்ற 12 வேட்பாளா்களும் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனா்.

ஆம்பூா் தொகுதியில் திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன், தவெக வேட்பாளா் இம்தியாஸ், அதிமுக வேட்பாளா் வெங்கடேசன் ஆகிய 3 பேரை தவிர 13 போ் டெபாசிட் இழந்தனா். திருப்பத்தூா் தொகுதியில் தவெக வேட்பாளா் டாக்டா் திருப்பதி, திமுக வேட்பாளா் நல்லதம்பி ஆகியோரை தவிர 22 போ் டெபாசிட் இழந்தனா்.

ஜோலாா்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி, தவெக வேட்பாளா் முனுசாமி, திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி ஆகிய 3 பேரை தவிர மற்ற 16 வேட்பாளா்களும் டெபாசிட்டை இழந்தனா். மொத்தம் 63 வேட்பாளா்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.