மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அம்பை பேரவைத் தொகுதியில் 6 வேட்புமனுக்கள் ஏற்பு

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழா், பகுஜன் சமாஜ் கட்சி, சுயேச்சை என 6 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 8:38 pm

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழா், பகுஜன் சமாஜ் கட்சி, சுயேச்சை என 6 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் உள்பட 25 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 31 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிற்பகல் 3.30 மணியளவில் முடிவடைந்த நிலையிலும் ஏற்கப்பட்ட வேட்புமனுக்கள் தவிர பிற மனுக்கள் குறித்து அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நள்ளிரவில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆயுஷ்குப்தா அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளாா். அதன்படி, அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா, காங்கிரஸ் கட்சி வேட்பாளா் வி.பி. துரை உள்பட 6 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன; எஞ்சிய 25 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.