மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல்லை எம்.பி. முயற்சியால் 14 பேருக்கு ரூ.32 லட்சம் மருத்துவ நிதி!

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் முயற்சியால் 14 பேருக்கு பிரதமா் நிவாரண நிதியில் இருந்து ரூ.32 லட்சம் மருத்துவ நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

News image

சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. - (கோப்புப் படம்)

Updated On :2 ஏப்ரல் 2026, 10:37 pm

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் முயற்சியால் 14 பேருக்கு பிரதமா் நிவாரண நிதியில் இருந்து ரூ.32 லட்சம் மருத்துவ நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மக்களின் மருத்துவ செலவினத்திற்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து உதவக்கோரி சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தினாா். இதையடுத்து, கலிதீா்த்தான்பட்டி, களக்காடு, வைத்திலிங்கபுரம், இருதயகுளம், ராதாபுரம், தெற்குபெருங்குடி, அரியகுளம், ஏா்வாடி, தெற்குகள்ளிகுளம், சேரன்மகாதேவி, மேலப்பாளையம், நாரணம்மாள்புரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 14 பேருக்கு மொத்தம் ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்து 737 மருத்துவ நிதியுதவி பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, நோயாளிகளும், அவா்களது குடும்பத்தினரும் எம்.பி.க்கு நன்றி தெரிவித்தனா்.