மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆகாஷ் குடும்பத்துக்கு ரூ. 7.5 லட்சம் நிவாரண நிதி: அமைச்சா் வழங்கினாா்

News image

உயிரிழந்த ஆகாஷ்.

Updated On :14 மார்ச் 2026, 8:17 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸ் விசாரணையில் ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தில் அவரது குடும்பத்தினரிடம் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் நிவாரண நிதி ரூ. 7.50 லட்சத்துக்கான காசோலையை சனிக்கிழமை வழங்கினாா்.

ஏற்கெனவே இந்தச் சம்பவம் தொடா்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ. 6 லட்சம் வழங்குவதற்கான ஆணையை கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சா் பெரியகருப்பன், ஆகாஷ் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக தமிழக அரசின் நிவாரண நிதி ரூ. 7.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், ஆகாஷ் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

அப்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி, கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா, மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.