தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அவரது குடும்பத்துக்கு மேலும் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் மாரீஸ்வரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூா் பகுதியில் கடந்த மாதம் 10-ஆம் தேதி மாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்ற பிளஸ் 2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக புகாா் அளித்தும் விளாத்திக்குளம் போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அங்கு பணியிலிருந்த பெண் காவலா் மாணவியின் பெற்றோரை இழிவுபடுத்தும் வகையில் பேசினாா்.
இந்த நிலையில், காவல் துறையினா் இந்த வழக்கை விசாரித்தால் விசாரணை சரியான முறையில் இருக்காது. எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். சிறப்பு விசாரணை குழுவை அமைத்து நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் அரசு இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயிரிழந்த மாணவியின் பெற்றோா் முன்னிலையாகி, இந்த வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.
அரசுத் தரப்பில் குறுக்கிட்ட வழக்குரைா்கள், மாணவியின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக இரண்டு வாரங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை நடத்த அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் நியமிக்கப்படுவாா் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஏற்கெனவே அரசு சாா்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. மாணவியின் குடும்பத்துக்கு மேலும் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். வழக்கு விசாரணையை நடத்த அரசுத் தரப்பில் குற்றவியல் பிரிவில் மூத்த வழக்குஞரை நியமிக்க உத்தரவிடப்படுகிறது. வழக்கு விசாரணை சரியான முறையில் செல்கிறது. எனவே, மாணவியின் பெற்றோரை இந்த வழக்கில் மனுதாரராகச் சோ்க்க வேண்டியதில்லை. இந்த வழக்கு விசாரணை முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

கிணற்றில் மிதந்த மாணவி சடலம்: போலீஸாா் விசாரணை!

விளாத்திகுளம் மாணவி படுகொலை வழக்கில் இளைஞர் கைது

பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை

பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: உறவினா்கள் முற்றுகை, சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


