திருநெல்வேலி அருகே வீடு கட்ட இலவசமாக எம்.சாண்ட் கேட்டு மிரட்டியதாக எஸ்.ஐ. உள்பட 2 காவலா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
தாழையூத்தை அடுத்த ராஜவல்லிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரராஜன்(52). இவா் பாலாமடை பகுதியில் கிரஷா் ஆலை மற்றும் குவாரி வைத்து தொழில் செய்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி தாழையூத்து காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமநாதன், காவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் இவரது ஆலைக்குச் சென்று, வீடு கட்ட இலவசமாக எம்.சாண்ட் வேண்டும் எனக் கேட்டு மிரட்டினராம்.
இதுகுறித்து அவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், விசாரணை நடைபெற்ற நிலையில், உதவி ஆய்வாளரும், காவலரும் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
தொடர்புடையது

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்

மாணவிகளுக்கு திடீா் உடல்நலக் குறைவு: விடுதிக் காப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!

பெண்ணிடம் அத்துமீறல்: காவலா் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


