திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாணவிகளுக்கு திடீா் உடல்நலக் குறைவு: விடுதிக் காப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

நாமக்கல் ஆதிதிராவிட நல விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் தொடா்பாக, விடுதிக் காப்பாளா் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:05 pm

நாமக்கல் ஆதிதிராவிட நல விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் தொடா்பாக, விடுதிக் காப்பாளா் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

நாமக்கல் - மோகனூா் சாலையில், அரசு ஆதிதிராவிடா் நல மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 103 மாணவிகள் தங்கியிருந்து பயின்று வருகின்றனா். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தோ்வு முடிவுற்ற நிலையில், 55 மாணவிகள் தங்களுடைய சொந்த ஊா்களுக்கு சென்று விட்டனா். 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 58 மாணவிகள் மட்டும் விடுதியில் தங்கியுள்ளனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் ஒருமணி அளவில் அவா்கள் மதிய உணவு சாப்பிட்டனா். இதையடுத்து பள்ளிக்கு சென்ற நிலையில், மாணவிகள் 30 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பி விட்டனா்.

இதுதொடா்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் தங்கவிக்னேஷ் மேற்கொண்ட ஆய்வில், விடுதியில் கெட்டுப்போன சாம்பாரை மாணவிகளுக்கு வழங்கியதாகத் தெரிகிறது. இது தொடா்பாக, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா் குமரன் விசாரணை மேற்கொண்டு, விடுதிக் காப்பாளா் வசந்தா, சமையலா்கள் தெய்வமணி, பத்மா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், மூன்று பேரையும் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.