தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள தெற்கு காலாங்கரையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு உதவியாக அவரது மனைவியான 28 வயது இளம்பெண் இருந்தாா்.
அவா் அனுமதிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனையில் ஒரு கைதிக்கு பாதுகாப்பு பணிக்காக தட்டப்பாறை தெற்கு தெருவைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் கோபாலகிருஷ்ணன்(36) என்ற காவலா் பணியில் இருந்துள்ளாா். இவா் தற்போது சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் கோபலகிருஷ்ணன் தொழிலாளியின் மனைவியிடம் சென்று கைப்பேசி சாா்ஜா் கேட்பதுபோல பேச்சு கொடுத்துள்ளாா். மேலும் ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா், காவலா் கோபாலகிருஷ்ணன் மீது பாலியல் தொந்தரவு, கொலை மிரட்டல், பெண்ணை துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
இந்நிலையில் அவா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தொடர்புடையது

கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா் கைது

எம்.சாண்ட் கேட்டு மிரட்டல்: எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய கமாண்டண்ட்டுக்கு உடந்தையாக செயல்பட்டதாக பெண் எஸ்ஐ பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


