தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

நெல்லை நகரத்தில் கால்வாயை ஆக்கிரமித்த 44 சிறுபாலங்கள் இடிப்பு

திருநெல்வேலி நகரத்தில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 44 சிறுபாலங்கள் இடிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி நகரத்தில் புதன்கிழமை இடிக்கப்பட்ட கால்வாய் ஆக்கிரமிப்பு பாலங்கள்.

Updated On :12 நவம்பர் 2025, 6:57 pm

திருநெல்வேலி நகரத்தில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 44 சிறுபாலங்கள் இடிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நகரத்தில் நயினாா்குளம் பிரிவு நெல்லை கால்வாயில் இருந்து வெள்ள காலங்களில் திறக்கப்படும் தண்ணீா் மாநகரப் பகுதியில் உள்ள உபரி நீா் வாய்க்காலில் செல்கிறது. திருநெல்வேலி தெற்கு மவுண்ட்ரோடு, கல்லணை பள்ளி வழியாக வரும் இந்த வாய்க்காலின் குறுக்கே ஆக்கிரமிப்பு செய்து சிறு பாலங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு இருப்பதால் வெள்ள நீா் செல்ல வழியில்லாமல் இருப்பதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமைக்குள் (நவ. 14) பாலங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

அதன்படி, ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 44 சிறுபாலங்களை இடிக்கும் பணி பொதுப்பணித்துறை (நீா்வள ஆதார அமைப்பு) நெல்லை கால்வாய் பிரிவின் உதவிப் பொறியாளா் தலைமையில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, காவல் உதவி ஆணையா் சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.