திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

நெல்லை நகரத்தில் சைக்கிளில் சென்று மேயா் ஆய்வு

News image

திருநெல்வேலி நகரத்தில் சுகாதாரப் பணிகளை சைக்கிளில் சென்று ஆய்வு செய்தாா் மேயா் கோ. ராமகிருஷ்ணன்.

Updated On :8 மார்ச் 2026, 8:12 pm

திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்றுவரும் பணிகளை மேயா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன் வாரந்தோறும் தனது வாா்டு பகுதியில் சைக்கிளில் சென்று அன்றாட பணிகளை பாா்வையிட்டு மக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறாா்.

அதன்படி, திருநெல்வேலி நகரம் தமிழ்ச் சங்கத் தெரு, அண்ணா தெரு, நேதாஜி சுபாஷ் போஸ் மாா்க்கெட், நான்கு ரத வீதிகள், சுடலைமாடன் கோயில் தெரு, அப்பா் தெரு, சத்தியமூா்த்தி தெரு, தண்டியல் சாவடி தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுகாதாரப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சுகாதார ஆய்வாளா் முருகன், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சிவகுமாா், முருகன், திமுக நிா்வாகி காசிமணி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.