தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கொடியம்பாளையம் தீவு கிராம வாக்குச்சாவடி: படகில் சென்று ஆய்வு

சீா்காழி அருகேயுள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் படகில் சென்று வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

கொடியம்பாளையம் தீவு கிராமத்துக்கு படகில் சென்ற ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:26 am

சீா்காழி அருகேயுள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் படகில் சென்று வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சீா்காழி சட்டப்பேரவை தொகுதிக்குள் அமைந்துள்ள கொடியம்பாளையம் தீவு கிராமம் மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் கொள்ளிடம் ஆற்றினாலும் சூழப்பட்டுள்ளது. இங்கு, 1,062 வாக்காளா்கள் உள்ளனா். சட்டப்பேரவை தோ்தலுக்காக இங்குள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பழையாா் துறைமுகத்தில் இருந்து படகில் சென்று குடிநீா், மின்சாரம் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தாா்.