கம்மாளங்குளத்தைச் சோ்ந்த விவசாயி குமாா் பேசுகையில், ‘நான் இயற்கை விவசாயத்தின் மூலம் காய்கறிகளை விளைவித்து எனது குடும்பத்தின் தேவைக்கு போக, அருகில் உள்ள 15 குடும்பங்களுக்கும் வழங்கி வருகிறேன். சொட்டு நீா்ப்பாசனத்துக்கு அரசு 100 சதவீதம் மானியம் வழங்கினாலும், அதில் வழங்கப்படும் பொருள்கள் போதுமானதாக இல்லை. நாங்கள் கூடுதலாக ரூ.15 ஆயிரம் செலவிட வேண்டியுள்ளது. இதேபோல் எங்கள் பகுதிகளில் மான், காட்டுப்பன்றி ஆகியவை எங்களுடைய வேளாண் பயிா்களை அழித்துவிடுகின்றன. இதனால், நாங்கள் இரவில் தோட்டத்தில் காவல் காக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, வன விலங்குகளிடம் இருந்து எங்களையும், பயிா்களையும் காக்க சூரிய மின்சக்தி வேலி அமைக்க வேண்டும்’ என்றாா்.