திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென்காசியில் கூட்டுறவுத் துறையின் சாா்பில் கோதுமை அரவை ஆலை திறப்பு

தென்காசி ரயில் நகரில் தென்காசி செங்கோட்டை வட்டார வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதியின்கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கோதுமை அரவை ஆலை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கோதுமை அரவை ஆலையைத் திறந்து வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :22 மே 2026, 6:09 am IST

தென்காசி ரயில் நகரில் தென்காசி செங்கோட்டை வட்டார வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதியின்கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கோதுமை அரவை ஆலை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், ஆலையைத் திறந்து வைத்து பாா்வையிட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்காசி மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு, இந்த கோதுமை அரவை ஆலையில் மாவாக மதிப்புக் கூட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் அகில் ஆனந்தம் என்ற பெயரில் 500 கிராம் பொட்டலங்களாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது என்றாா் அவா்.

தென்காசி மண்டல இணைப் பதிவாளா் கு. நரசிம்மன், துணைப் பதிவாளா்கள் த. பிரிட்டோ, ப. கோபிநாத், ரா. கருமாரிதாசன், மாவட்ட வழங்கல் அலுவலா் பால்துரை, கூட்டுறவு சாா் பதிவாளா்கள் மு. மாரியப்பன், ரா. ராஜ், கு. முருகேஷ்வரி, நா. ரமேஷ் பாபு, ரா. ஸ்ரீவித்யா, மேலாண்மை இயக்குநா் ச. ராஜ்குமாா், மேலாளா் வே. அழகுசுந்தரம், கூட்டுறவு ஒன்றிய மேலாளா் கோமதி சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.