தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தென்காசி வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:41 am

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தென்காசி மஞ்சம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொண்டுள்ள செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 1,680 வாக்குச்சாவடி மையங்களில் மாதிரி வாக்குப்பதிவு முடிந்து காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டும், பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டும் கண்காணிக்கப்பட்டன. வாக்குச்சாவடிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் என்ற அடிப்படையில் 1,680 வாக்குச்சாவடி மையங்களுக்கு நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.