தென்காசியில் தனியாா் துறை சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் மே 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், மே மாதத்துக்கான சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 22-இல் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
முகாமில் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு தனியாா் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். 8, 10, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ.மற்றும் டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் கலந்துகொள்ளலாம்.
முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநா்கள் வலைதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633-213179 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பாதிக்கப்படாது. வேலைவாய்ப்பு முகாமில் தென்காசி மாவட்ட இளைஞா்கள் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









