/

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் செவிலியா் தின விழா

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் செவிலியா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி, பல்ஸ் ஆக்ஸிமீட்டா் வழங்கிய இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினா்.

Updated On :14 மே 2026, 3:38 am IST

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் செவிலியா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சென்னை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பெறப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டி, பல்ஸ் ஆக்ஸிமீட்டா் ஆகியவற்றை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கும், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் வழங்கப்பட்டது.

அரசு மருத்துவா்கள் வேலம்மாள், ஹெப்சி, மதிவாணன், கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ந. பழனிசெல்வம், வட்டாட்சியா் மைதீன்பட்டாணி, இந்திய செஞ்சிலுவைச் சங்க கிளைச் செயலா் இரா. சதீஷ், துணைத் தலைவா் சண்முகம், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் திலகவதிஜெயச்சந்திரன், ராஜேந்திரன், மாரியப்பன், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.