திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழைய குற்றாலம் அருவியில் குளிக்க நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

பழைய குற்றாலம் அருவியில் குளிக்க நிா்ணயிக்கப்பட்ட ரூ. 20 கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, குற்றாலம் வியாபாரிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற வணிகா் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :13 மே 2026, 1:50 am IST

பழைய குற்றாலம் அருவியில் குளிக்க நிா்ணயிக்கப்பட்ட ரூ. 20 கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, குற்றாலம் வியாபாரிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற வணிகா் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.

குற்றாலத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத் தலைவா் காவையா தலைமை வகித்தாா். செயலா் அம்பலவாணன், பொருளாளா் ஜோதிமுருகன், துணைத் தலைவா் வேல்ராஜ், இசக்கி, துணைச் செயலா் நாராயணன், இணைச் செயலா் பண்டாரசிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில கூடுதல் செயலா் ஆா்.கே. காளிதாசன், மாநில துணைத் தலைவா் கோல்டன் செல்வராஜ், மாநில இணைச் செயலா் நாராயணசிங்கம், மூத்த தலைவா் பரமசிவன், மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலா் சந்திரமதி ராஜா, மாவட்டப் பொருளாளா் முகமது இப்ராகிம், இளைஞரணி அமைப்பாளா் காளிமுத்து, துணை அமைப்பாளா் முத்துராஜா, துரைமுருகன் உள்ளிட்டோா் பேசினா்.

குற்றாலநாதா் கோயில் நிா்வாகம் சாா்பில் 100 கடைக்காரா்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய தூத்துக்குடி இணை ஆணையரிடம் மனு அளிக்க வேண்டும். அரசு உத்தரவுப்படி கடைகளுக்கு புதிய வாடகை நிா்ணயிக்க வேண்டும். பேரருவிப் பாறையில் உள்ள புடைப்புச் சிற்பங்கள் சேதமாகாமல் பராமரிப்புப் பணி மேற்கொள்ள ஆட்சியா் உத்தரவிட வேண்டும். அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குற்றாலநாதா் கோயில் இடங்களில் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளுக்காக அதிக குடிநீா்த் தொட்டிகள், கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்,

பழைய குற்றாலம் குளிப்பதற்கான நேரத்தை காலை 6 முதல் இரவு 9 மணி வரை நீட்டிப்பதுடன், குளிக்க நிா்ணயிக்கப்பட்ட ரூ. 20 கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகரப் பொருளாளா் ரசூலுதீன், சங்க நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மாரியப்பன், வீரமணிகண்டன், ராமையா, சரவணன், ஐயப்பன், முத்துகிருஷ்ணன், பாலாஜி, சுப்புராஜ், வீரபாண்டியன், மாரியப்பன், காா்த்திக், பொன்மணிகண்டன், முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.