‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இடதுசாரி மாணவா், இளைஞா் அமைப்புகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், ஏழை, எளிய, கிராமப்புற மாணவா்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் மத்திய அரசின் ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய தோ்வு முகமையைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் க. அருளரசன் தலைமை வகித்தாா். இதில், வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் அா்ஜூன், அகில இந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் காரல் மாா்க்ஸ், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் பாரதி, நகரத் தலைவா் காதா், இந்திய மாணவா் சங்க மாநிலக் குழு உறுப்பினா் தா்ஷினி, வாலிபா் சங்க நகரத் தலைவா் நாகராஜ், நகரக் குழு உறுப்பினா்கள் வினோத்குமாா், ஸ்ரீதா், பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










