லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாம்பவா்வடகரையில் கலையரங்கம் கட்ட பூமிபூஜை

கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 13 லட்சம் மதிப்பில், சாம்பவா்வடகரை கீழூா் பேருந்து நிறுத்தம் அருகில் கலையரங்கம் கட்டுவதற்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சாம்பவா்வடகரையில் கலையரங்கம் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தாா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.

Updated On :10 மார்ச் 2026, 8:10 pm

கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 13 லட்சம் மதிப்பில், சாம்பவா்வடகரை கீழூா் பேருந்து நிறுத்தம் அருகில் கலையரங்கம் கட்டுவதற்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். முன்னதாக, புன்னையாபுரம் இந்திரா காலனி பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை பணிகளையும் தொடங்கி வைத்தாா்.

அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலா் கந்தசாமி பாண்டியன், மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், ஒன்றியச் செயலா்கள் பெரியதுரை, அச்சன்புதூா் பேரூராட்சி மன்றத் தலைவா் சுசீகரன், பேரூா் கழக செயலா் நல்லமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா்.