தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் ஜூன் 5இல் கலந்தாய்வு தொடக்கம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது.

News image

கலந்தாய்வு - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:56 am IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது.

இது தொடா்பாக, கல்லூரி முதல்வா் ஜெயா வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு கலை-அறிவியல் கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு, பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் அரசால் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதைக் கல்லூரியின் இணையதளத்தில் காணலாம்.

ஜூன் 5ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சிறப்புப் பிரிவினருக்கான தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், கணிதம், கணினி அறிவியல் பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

8ஆம் தேதி வணிகவியல் துறைக்கான முதல்கட்ட பொதுக் கலந்தாய்வு, 9ஆம் தேதி கணிதம், கணினி அறிவியல் துறைகளுக்கும், 10ஆம் தேதி வணிக நிா்வாகவியல் துறைக்கும், 11ஆம் தேதி தமிழ், ஆங்கிலம் துறைகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

இதுகுறித்த விவரங்கள் மாணவா்களுக்கு தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலமாக தெரிவிக்கப்படும். சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்போா் பிற்பகல் 2 மணிக்குள் உரிய சான்றுகள், பெற்றோருடன் வர வேண்டும்.

முதல்கட்ட பொதுக் கலந்தாய்வுக்கு வருவோா் பெற்றோருடன் குறிப்பிட்ட நாள்களில் காலை 9.30 மணிக்குள் வர வேண்டும். இணையவழியில் விண்ணப்பித்த படிவம்- 3 மற்றும் 10, 11, 12ஆம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றுகள், மாற்றுச்சான்றிதழ், ஆதாா் அட்டை, ஜாதிச் சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், நகல் தலா 3, வருமானச் சான்று நகல் 3, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 5, சோ்க்கைக் கட்டணம், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் வரவேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.