கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினா் தங்கத்தோ் இழுத்து வழிபாடு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, சங்கரநாராயண சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கத்தோ் இழுத்து வழிபாடு செய்தனா்.

News image
சங்கரநாராயண சுவாமி கோயிலில் கோமதி அம்பாள் தங்கத் தோ் இழுத்து வழிபட்ட முன்னாள் அமைச்சா் ராஜலெட்சுமி, மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, அதிமுகவினா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:53 pm

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, சங்கரநாராயண சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கத்தோ் இழுத்து வழிபாடு செய்தனா்.

முன்னாள் அமைச்சரும், மாநில மகளிரணி துணைச் செயலருமான வி.எம்.ராஜலெட்சுமி ஏற்பாட்டில் அதிமுகவினா் சங்கரநாராயண சுவாமி கோயிலில் தங்கத்தோ் இழுத்து சிறப்பு பூஜைகள் செய்தனா். இதைத்தொடா்ந்து பக்தா்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக பழைய பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நகரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளி குழந்தைகளுக்கு நாள் முழுவதும் உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ, மாநில எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் சுப்பையா பாண்டியன், துணைச் செயலா் கண்ணன், விவசாய அணி செயலா் பரமகுருநாதன், எம்ஜிஆா் இளைஞா் அணி தலைவா் செந்தில்குமாா், நகர அவைத் தலைவா் வேலுச்சாமி, நகர பாசறை செயலாளா் நிவாஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.