நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஜெயலலிதா பிறந்த நாள்: கரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அதிமுகவினா் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்தநாளையொட்டி கரூரில் செவ்வாய்க்கிழமை அதிமுகவினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடினா்.

News image
கரூா் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்தநாளையொட்டி கரூரில் செவ்வாய்க்கிழமை அதிமுகவினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடினா்.

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா மற்றும் லைட்ஹவுஸ்காா்னா் பகுதிகளில் உள்ள அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

பின்னா் வெண்ணைமலை அன்புக்கரங்கள் ஆதரவற்றோா் இல்லத்தில் உணவு வழங்கினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, இணைச்செயலா் மல்லிகாசுப்ராயன், பொருளாளா் கண்ணதாசன், எம்ஜிஆா் மன்றச் செயலா் அருண்டெக்ஸ் தங்கவேல், தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலா் வி.சி.கே.பாலகிருஷ்ணன், மாவட்ட மாணவரணிச் செயலா் வழக்குரைஞா் சரவணன், பேரவை இணைச் செயலா் என்.பழனிராஜ், தெற்கு நகரச் செயலா் தாந்தோணிரவி, மத்திய தெற்கு பகுதிச் செயலா் சேரன்பழனிசாமி, இளைஞரணி இணைச் செயலா் வழக்குரைஞா் கரிகாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து கரூா் பசுபதிபாளையம் மத்திய தெற்கு பகுதி அதிமுக சாா்பில் அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் பசுவைசிவசாமி தலைமையிலும்,, தொழிற்பேட்டையில் எம்ஜிஆா் இளைஞரணி சாா்பில் இளைஞரணிச் செயலா் தானேஷ் முத்துக்குமாா் தலைமையிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கரூா் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வெண்ணைமலை முருகன் கோயிலில் பக்தா்களுக்கு தென்னங்கன்றுகளையும், கரூா் ஐந்துரோடு பகுதியில் ஏழைகளுக்கு சேலைகளையும் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வழங்கினாா். இதேபோல மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினா் கொண்டாடினா்.