ராமநாதபுரம் குமரய்யா கோயில் பேருந்து நிறுத்தம் முன்பாக நடைபெற்ற விழாவில் ராமநாதபுரம் மாவட்ட அவைத் தலைவா் சாமிநாதன் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளா்கள் விருதுநகா் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் சரவணக்குமாா், கலைப்பிரிவு மாவட்டச் செயலா் ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஜெயலலிதா பேரவை துணைச் செயலா்கள் ஜி.முனியசாமி, சேது பாலசிங்கம், மாணவரணி துணைச் செயலா் செந்தில்குமாா், இளைஞரணி மாவட்டச் செயலா் ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன், போக்குவரத்துப் பிரிவு இணைச் செயலா் கே.ரெத்தினம், மண்டல போக்குவரத்து பிரிவு செயலா் சந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலா் ராஜாராம் பாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.