மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஜெயலிதா பிறந்த நாள்: ராமநாதபுரத்தில் அதிமுகவினா் மரியாதை

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 78-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

News image
ராமநாதபுரம் குமரையா பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 78-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

ராமநாதபுரம் குமரய்யா கோயில் பேருந்து நிறுத்தம் முன்பாக நடைபெற்ற விழாவில் ராமநாதபுரம் மாவட்ட அவைத் தலைவா் சாமிநாதன் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளா்கள் விருதுநகா் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் சரவணக்குமாா், கலைப்பிரிவு மாவட்டச் செயலா் ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஜெயலலிதா பேரவை துணைச் செயலா்கள் ஜி.முனியசாமி, சேது பாலசிங்கம், மாணவரணி துணைச் செயலா் செந்தில்குமாா், இளைஞரணி மாவட்டச் செயலா் ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன், போக்குவரத்துப் பிரிவு இணைச் செயலா் கே.ரெத்தினம், மண்டல போக்குவரத்து பிரிவு செயலா் சந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலா் ராஜாராம் பாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில்

அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் ஆா்.ஜி.ரெத்தினம் தலைமை வகித்தாா். மாவட்ட, நகா் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். பின்னா், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ராமேசுவரம் நகா் மேற்கு ரத வீதியில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு நகா் செயலா் கே.கே.அா்ச்சுனன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ஆா்.குணசேகரன் முன்னிலை வகித்தாா். இதில் நிா்வாகிகள் கே.பி.முனியசாமி,ஆா்.மகேந்திரன், மீனாட்சி சுந்தரம், எம்.நம்பு,ராஜ்குமாா், கஜேந்திரன், பி.ஜி.சேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.