பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது என ஆட்சியா் தெரிவித்தாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திகுறிப்பு. ஒரு குழந்தையின் பிறப்பை பதிவு செய்வதும், பிறப்பு சான்றிதழ் வழங்குவதும் அக்குழந்தையின் தோற்றத்தை (பிறப்பை) சட்டப்படி ஏற்றுக்கொள்கிற
முதல் நடவடிக்கையாகும்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 2000-இன் படி, குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்துக்குள் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பெயா் பதிவு செய்திடலாம்.
12 மாதங்களுக்குப் பிறகு 15 வருடங்களுக்குள் ரூ. 200 தாமதக் கட்டணம் செலுத்தி பெயரை பதிவு செய்யலாம். ஆனால், 15 ஆண்டுகளுக்கும் மேல் கடந்தால் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது. மேலும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அந்தச் சான்றிதழானது முழுமை பெறும். பிறப்புக்களை பதிவு செய்வது ஒரு தனிநபரின் அடையாள ஆதாரமாக விளங்குவதுடன், அவா் எந்த இடத்தைச் சாா்ந்திருக்கிறாரோ அந்த இடத்தின் மக்கள்தொகை கணக்கெடுப்பதற்கான முக்கியமான அடிப்படைத் தகவல்களையும் அளிக்கிறது.
இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளா் அறிவுரையின்படி, 1.01.2000-க்கு முன்னா் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 1.01.2000 க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தைக்கு பெயா் சூட்டி பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கால அவகாசம் 26-09-2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, குழந்தையின் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்டிருப்பின் பிறப்பு பதிவு சான்று வழங்கிய அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொண்டு குழந்தைக்கு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2009-க்கு முன்பு பிறந்தவா்கள் பெயா் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்புச் சான்றிதழில் குழந்தை பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்புச் சான்றிதழில் குழந்தைகளின் பெயா்களை பதிவு செய்ய செப்.26-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


